2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நுண் மற்றும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்திக்கான 'திவியட்ட உதானய' நிகழ்ச்சித்திட்டம் - துணி மற்றும் கைத்தறி கைத்தொழிலை மீள ஆரம்பிப்பதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான கைத்தொழிற் பேட்டைகளை விருத்தி செய்வதற்கும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கைத்தறி மற்றும் தைத்த ஆடைகள், உணவு உற்பத்தி, மரம் மற்றும் கைப்பணி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள 10,000 குடிசைக் கைத்தொழிலாளர்களை வர்த்தக ரீதியிலான தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கும் அறிவு மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் 11,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் ஊடாக நேரடியாக மற்றும் மறைமுகமாக 11,000 தொழில் வாய்ப்புகளை புதிதாக உருவாக்குவதற்கும் இயலுமாகும் வகையில் 'திவியட்ட உதானய' என்னும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இதற்கு சமமான பல்வேறுபட்ட கடன் திட்டங்களுடன் இணைந்த நிகழ்ச்சித்திட்ட மொன்றாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. |