• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நோயாளிகளுக்கு நிலவும் வசதிகள் போதுமானதாக இல்லாமையினால் 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதலாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தினால் ஏற்கனவே இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றதோடு, அதன் இரண்டாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு பணிகளும்கூட இதற்கு ஒருங்கிணைவாக ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது.

இதற்கமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்திற்கான நிருமாணிப்புப் பணிகள் வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் வரியுடன் 1,359.35 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கும் Central Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.