2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய தேர்தல் முறைமை மற்றும் அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பொது மக்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் - சகல உள்ளூராட்சி அதிகாரசபைகளிலும் புதிய தேர்தல் முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட அடிப்படை 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்களானவை பிரிவிற்கு பொறுப்புகூறும் உறுப்பினரின் தேர்விற்கு இட்டுச் சென்றுள்ளதுடன் விகிதாசார பிரதிநிதித்துவத்தையும் உறுதிப் படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் இத்திருத்தங்கள் பற்றிய பொதுமக்களின் புரிதல்கள் இன்னமும் போதுமான மட்டத்தில் இல்லை என்பது வௌிப்படையாக மாறியுள்ளது. அதற்கிணங்க, உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் முறைமைக்கான திருத்தங்களுக்கூடாக கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை தொடர்பில் பொதுமக்களினதும் சிவில் அமைப்புக்களினதும் விழிப்புணர்வினை உருவாக்குவதற்கு துரித நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன்கண் எதிர்பார்க்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |