2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கூட்டு முத்திரை வௌியீடுகளுக்கு உரியதாக இலங்கை தபால் திணைக்களத்திற்கும் பிற வௌிநாட்டு தபால் நிறுவனங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கையுடன் ரஷ்ய கூட்டாட்சிக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்த 60 ஆண்டுகளினதும் கொரிய குடியரசுடனான இராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டுகளினதும் நினைவையொட்டி ஞாபகார்த்த முத்திரைகளை வௌியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியான பௌத்த வழிபாட்டுத் தலங்களின் அடிப்படையில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலும், இலங்கையினதும் கொரிய குடியரசினதும் கலாசார நடனங்களின் அடிப்படையில் அந்நாடுகளுக்கு இடையிலும், இலங்கையின் குகைக் கோயில்கள் மற்றும் ரஷ்யாவிலுள்ள இதையொத்த சமயத்தலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையிலும் இந் ஞாபகார்த்த முத்திரைகள் உருவாக்கப்படவுள்ளன. அதற்கிணங்க, தபால் திணைக்களம் மற்றும் உரிய அந்தந்த நாடுகளின் தபால் நிறுவனங்களுக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |