2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் ஊழியர்களை அனுப்புவதற்காக கொரிய குடியரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை - கொரிய குடியரசில் இலங்கை பணியாளர்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கும் செய்முறையின் வௌிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் இவ்விரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு கருதி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமென தொழில் அனுமதிப்பத்திர முறையினை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்குடன், 02 வருட காலப்பகுதிக்கு 2015 ஆம் ஆண்டில் கொரிய குடியரசின் தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலப்பகுதியை நீடிக்கும் பொருட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |