2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுதல் - இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு முகவராண்மைகளை வலுப்படுத்தல், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கென முழு நிறுவன கட்டமைப்பையும் ஆக்கபூர்வமாக ஒருங்கிணைத்தல், மோசடி, இலஞ்சம் மற்றும் ஊழலை தடுத்தல் குறித்து அரச மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் இலங்கை சமுதாயத்தின் மீது இலஞ்சம் மற்றும் ஊழலின் பாதகமான விளைவுகள் பற்றி பொதுமக்கள் புரிந்துணர்வை அதிகரித்தல் ஆகியவற்றின் பொருட்டு உரிய முகவராண்மைகளுடன் இணைந்து இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |