2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுஓயா படுகைக்கான மழைநீர் வடிகால் மற்றும் சூழல் மேம்பாட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் - கம்பஹா மாவட்டத்திலுள்ள களுஓயா படுகையானது எதிர்கால நகர அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முன்னுரிமை வாய்ந்த பிரதேசமொன்றாக இனங் காணப்பட்டுள்ளது. ஆதலால், 5 வருட (2018 - 2022) காலப்பகுதிக்குள் இப்படுகைக்கான மழைநீர் வடிகால் மற்றும் சூழல் மேம்பாட்டு கருத்திட்ட மொன்றை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், வௌிநாட்டு உதவியின் கீழ் இக்கருத்திட்டத்தை முன்னுரிமை வாய்ந்த கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |