2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிபுணத்துவ மருத்துவர்களின் பதிவேட்டினைத் தயாரிக்கும் பொருட்டு மருத்துவ கட்டளைச்சட்டத்தை திருத்துதல் - நிபுணத்துவ மருத்துவர்களின் வெவ்வேறான பதிவேடுகளை பேணுதலானது கூடுதல் பாதுகாப்பான மருத்துவ நலனை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான முக்கியமான முன்நிபந்தனையொன்றாக கருதப்படுகின்றது. இவ்விடயத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நோயாளர்நல சேவைகளின் தரத்தை பாதுகாக்கும் குறிக்கோளுடன் நிபுணத்துவ மருத்துவர் பதிவேடொன்றை தயாரிப்பதற்கான மருத்துவ கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கு அமைச்ச ரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அதற்கமையத் தயாரிக்கப்பட்ட மருத்துவ கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன்பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|