• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளப்பெருக்கு ஆபத்து காரணமாக வேறு பாதுகாப்பான அமைவிடங் களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குதல்
- பாதுகாப்பான அமைவிடமொன்றில் மீளக் குடியமர்த்தப்படும் பொருட்டு தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் இனங்காணப்பட்ட உயர் ஆபத்துமிக்க நிலச்சரிவு வலயங்களுக்குள் வாழும் 14,860 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கூறப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தம் காரணமாக வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் பாதுகாப்பான அமைவிடமொன்றில் மீள்குடியமர்த்தப்பட எதிர்பார்க்கப்படும் குடும்பங்களுக்கும் மேற்போந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுதல் பொருத்தமுடையதென மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கிணங்க, உயர் ஆபத்துமிக்க வௌ்ளப்பெருக்கு வலயங்களில் வாழும் மற்றும் வௌ்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் சேதமுற்ற, 05 மாவட்டங்களிலுள்ள குடும்பங்களை மீள்குடியேற்று வதற்காக, பாதுகாப்பான பிரதேசங்களில் 1,122 வீடுகளை நிருமாணிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.