• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வத்தேகம சமுர்த்தி சமுதாயம்சார் வங்கியை நிருமாணித்தல்
- 332 சமுர்த்தி பொது சபைகளும் 1,074 சமுர்த்தி சமுதாயம்சார் வங்கிகளும் தற்போது நாடு பூராகவும் தொழிற்படுகின்றன. இச்சமுர்த்தி வங்கிகளின் கிளைகள் அமைந்துள்ள அக்கட்டடங்களின் வசதிகளை மேம்படுத்துதல் காலத்தேவையொன்றாக மாறியுள்ளது. அதற்கிணங்க, அணுகி கொள்வதற்கு மிகவும் சிரமமாக உள்ள இடமொன்றில் பல்வேறுபட்ட குறைபாடுகளுக்கு மத்தியில் தற்போது நடாத்திச் செல்லப்படும், கண்டி மாவட்டத்திலுள்ள வத்தேகம சமுர்த்தி சமுதாயம்சார் வங்கியை பொதுமக்களுக்கு வசதியாக சேவையாற்றப் படக்கூடிய அமைவிடமொன்றில் தாபிக்கும் பொருட்டு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. ஆதலால், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சார்பில் வத்தேகமவில் அமைந்துள்ள 20 பேர்ச்சர்ஸ் அரசாங்க காணியொன்றை உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.