• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்தல்
- வௌிநாட்டு உதவி ஆதரவுடன் குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இக்கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் எழும் காலதாமதத்திற்கு ஊடாக ஏற்படும் பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை காரணமாக, பாத்தஹேவாஹெத்த மற்றும் குண்டசாலை பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 14 கிராமங்களிலுள்ள6,000 குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொது அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் தாபிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி, சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் உழைக்கும் குடும்பங்கள் வசிக்கும் அநுரகம, புபுதுகம மற்றும் முதுனகடே ஆகியன உள்ளடங்கலாக 14 கிரமங்களில் பொது மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.