• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பண்டாரநாயக்கா சருவதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத் திற்கும் நேபாளம் வௌிநாட்டலுவல்கள் நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- இலங்கை மற்றும் நேபாளத்தில் இராஜதந்திர, வௌிநாட்டுக் கொள்ளை மற்றும் சருவதேச உறவு பற்றிய துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கும் அத்துறைகளில் ஆர்வமாகவுள்ள தரப்பினர்களுக்கும் தகவல், நிபுணத்துவம் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான சந்தர்ப்பமொன்றினை வழங்கும் பொருட்டு இலங்கை பண்டாரநாயக்கா சருவதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்திற்கும் நேபாளம் வௌிநாட்டலுவல்கள் நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது.

ஆதலால், இலங்கைக்கும் நோபாளத்திற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் விரிவாக்கிக் கொள்வதற்கும் இரு நாடுகளினதும் வளர்ந்து வரும் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையில் இடைத்தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் இது வழிசமைக்கும். அதற்கிணங்க, பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டும் அதன்பின்னர் இவ் உடன்படிக்கையை பயனுறுதி வாய்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.