2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிணையங்கள் பரிவர்த்தனை சட்டம் - 2017 - மூலதனச்சந்தை தற்போது எதிர்கொள்ளும் சவால்களை இசைவாக்கும் பொருட்டு 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வெற்றிகரமாக தொழிற்படும் பங்குபரிவர்த்தனை ஒழுங்குறுத்தல் நிறுவனங்களினால் பின்பற்றப்படும் ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் மற்றும் நியமங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பிரேரிக்கப்பட்ட 'பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம்' இலங்கை சார்பில் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |