• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான ஒருங்கிணைப்பு செயலகத்தின் காலத்தை நீடித்தல்
- நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான ஒருங்கிணைப்பு செயலகமானது இலங்கையில் நல்லிணக்கத்துடன் தொடர்பு பட்ட தீர்மானங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செய்முறைகள் ஆகியவற்றின் பயனுறுதி வாய்ந்த அமுலாக்கம் கருதி இரு (02) வருட காலப்பகுதியொன்றுக்கு 2015 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. உரிய அமைச்சுக்களையும் ஏனைய அரச நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் போன்ற அக்கறைதாரர்களையும் ஒருங்கிணைப்பதன் மூலமும் நல்லிணக்கச் செய்முறைக்கு உதவி செய்தும் அதன் தொழிற்பாடுகளை இச்செயலகமானது தொடர்ந்து ஆற்றுகின்றது.

ஆதலால் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாட்டின் பொது மக்களுக்கிடையில் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையினை கருத்திற் கொண்டு, கூறப்பட்ட அலுவலக காலப்பகுதியை 2019‑03‑31 ஆம் திகதிவரை நீட்டிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.