• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் கட்டார் இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் இராசதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1976 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் பின்னர் பல்வேறுபட்ட துறைகளினூடாக இந்த உறவானது பலப்படுத்தப்பட்டுள்ளது. இராசதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை கூட்டாக நடாத்தும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அண்மையில் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் கட்டார் இராச்சியத்திற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் இராசதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.