• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் வலுசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- கட்டார் இராச்சியம் வளைகுடா பிரதேசத்தின் பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி செய்யும் முன்னணி நாடொன்றாகையினால் இலங்கையில் வலுசக்தி துறையின் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் போது கட்டார் இராச்சியத்துடன் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது முக்கியமானதாகும். இதற்கமைவாக இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் வலுசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் கட்டார் இராச்சியத்திற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினாலும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.