• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம் மாவட்ட பொது வைத்தியாசலையில் உத்தேச மருத்துவ காவறைத் தொகுதியினை நிருமாணித்தல்
- புத்தளம் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு சிகிச்சை சேவைகளை வழங்கும் பிரதான வைத்தியசாலை சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையாகும். தற்போது 88 படுக்கைகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையில் மருத்துவ காவறைத் தொகுதியை பெருமளவான நோயாளிகளுக்கு வசதிகள் வழங்கக்கூடிய விதத்தில் விருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நோக்கத்தை துரிதமாக பூர்த்தி செய்யும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உத்தேச மருத்துவ காவறைத் தொகுதியை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 583 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.