2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலகமொன்றைத் தாபித்தல் - காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் சனத்தொகை போன்ற சவால்களுக்கிடையே உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு நெல் உற்த்தியை மேலும் அதிகரிக்க வேண்டியிருந்தாலும், இதற்காக நெல் செய்கைப்பண்ணப்படும் காணியின் அளவினை மேலும் அதிகரிப்பது நடைமுறை ரீதியில் கடினமானதாகும். ஆதலால் ஆராய்ச்சி மற்றும் புதிய தொழினுட்ப முறைகளை பயன்படுத்துவதன் மூலம் நெல் உற்பத்தியை அதிகரிப்பதும் அறுவடையை விருத்தி செய்வதும் கட்டாயத் தேவையாகவுள்ளது. இதற்காக, பிலிப்பைனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் இலங்கைக்குத் தேவையான விஞ்ஞான மற்றும் தொழினுட்ப அறிவினைப் பெற்றுக் கொள்ளும் போது உயர் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால நெற்செய்கை தொடர்புபட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் பயனுள்ள வகையில் செய்வதற்காக இந்த நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலகமொன்றைத் இலங்கையின் பத்தலகொட பிரதேசத்திலுள்ள நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சருவதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கை நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |