• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேலியகொட கழிவுகளை கொட்டும் காணியை அபிவிருத்தி செய்தல்
- தற்போது திண்மக்கழிவுகளை இடுவதற்காக பயன்படுத்தப்படும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பேலியகொடை பிரதேசத்திலுள்ள அதிக சந்தைப் பெறுமதியுடன் கூடிய விஸ்தீரணத்தில் 07 ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணியை அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஒத்தாசையுடன் இந்த காணியை முறையாக நிரப்பி அண்மையிலுள்ள பிரதேசத்தில் மழைநீர் வடிந்து செல்லும் முறைமை யொன்றைத் நிருமாணிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.