• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்கொட "Walk Up” வீடமைப்பு தொகுதிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மேலதிக காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
- கொழும்பு நகரத்தில் குறைபாடுகளுடன் கூடிய குடியேற்றங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களை குறித்த இந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி மீளக் குடியமர்த்துவதற்கு மாடி வீடுகளை நிருமாணிக்கும் "நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின்" மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் கொழும்பு நகரம் உட்பட அதற்கண்மித்த 12 பிரதேசங்களில் 6,000 வீடுகள் ஏற்கனவே நிருமாணிக்கப்பட்டுள்ளன.

"நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின்" கீழ் அங்கொட பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் 500 வீட்டு அலகுகளைக் கொண்ட மாடி வீட்டு தொகுதிக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக அதற்கண்மையில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான மேலதிக காணித் துண்டொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்காக உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.