2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடும் வறண்ட காலநிலை நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் - கடும் வறண்ட காலநிலை நிலைமை காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் இல்லாமற் போனமையினால் கடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதியொன்றை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதன்கீழ் வரட்சியினால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் 740,000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களுக்கு கடந்த காலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் கடும் வரண்ட காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் இந்த நிலைமை இல்லாமற் போகுமளவிற்கு மழை வீழ்ச்சியானது போதுமானதாக இல்லையென தெரியவந்துள்ளதோடு, வரட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறிப்பிட்ட காலம் செல்லும். இதற்கமைவாக இந்த குடும்பங்களுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் உலர் உணவு பொதியினை தொடர்ந்தும் வழங்குவதற்கும் இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்வதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |