• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புலம்பெயரும் சுறா மீன்களின் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை புலம்பெயரும் விலங்கினங்களின் பாதுகாப்பு தொடர்பான சமவாயத்திற்கு 1993 ஆம் ஆண்டிலிருந்து ஒரு தரப்பாகவுள்ளது. இதற்கமைவாக இந்த சமவாயத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள புலம்பெயர் விலங்கினங்களின் பாதுகாப்பை நாட்டின் அதிகார பிரதேசத்தினுள் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டுள்ள புலம்பெயர் விசேட விலங்கினங்களை அல்லது குழுக்களை தழுவும் விதத்தில் அரசாங்கங்களுக்கிடையில் சர்வதேச அல்லது வலய மட்டத்திலான உடன்படிக்கைகளை செய்து கொள்வது இந்த சமவாயத்தின் மூலம் ஊக்குவிக்கப்படுகின்றது.

இதற்கமைவாக, 2017 ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதிவரை பிலிப்பைன்ஸ் மனிலாவில் நடாத்தப்படவுள்ள இந்த சமவாய தரப்பினர் மாநாட்டில் புலம்பெயரும் சுறா மீன்களின் பாதுகாப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயரும் சுறா மீன்களின் பாதுகாப்புக்கு நிதி மற்றும் தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்த உடன்படிக்கை காரணமாய் அமையும். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இலங்கை சார்பில் கைச்சாத்திடும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.