2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல் - இளைஞர் அபிவிருத்தியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பிரிவுகளின்பால் அறிவு மற்றும் அனுபவத்தை பரிமாறிக்கொள்ளல், இரு நாடுகளினதும் இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ, ஆளுமை அபிவிருத்தி மற்றும் ஆற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், இளைஞர்களுக்கான காலாசார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், இரு நாடுகளினதும் இளைய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், இளைய தொண்டு செய்யும் குழுக்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளல் போன்ற துறைகளைத் தழுவி இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |