2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'யாவருக்கும் புகலிடம்' மற்றும் 'கிராம சக்தி' மாதிரி கிராமங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் - 2016 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட அகில நாட்டு ரீதியிலான வீட்டுத் தேவைக்கான கணக்கெடுப்பின்படி இலங்கையில் வீடற்ற குறைந்த வருமானம் பெறும் 216,197 குடும்பங்கள் வசிக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு வீட்டுரிமையை வழங்குவதற்காக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் 'யாவருக்கும் புகலிடம்' மற்றும் 'கிராம சக்தி' மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டங்கள் மிக முன்னுரிமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களாக கருதி நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் 2020 ஆம் ஆண்டளவில் 2,500 மாதிரிக் கிராமங்களை நிருமாணிப்பதற்கு குறியிலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றி கொள்ளும் போது புதிய குடியேற்றங்களை நிருமாணிப்பதற்காக காணிகளை குறித்தொதுக்குதல், நுழைவு வீதிகளை அபிவிருத்தி செய்தல், குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்தல் அதேபோன்று மின்சாரம் வழங்குதல் அத்தியாவசியமானதாகும். ஆதலால், புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள 2,500 மாதிரி கிராமங்களுக்குத் தேவையான மேற்குறிப்பிட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அத்துடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப் படவுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் முன்னுரிமை வழங்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |