2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'கிராம சக்தி' மாதிரி கிராம கருத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளல் - வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 'கிராம சக்தி' மாதிரி கிராம கருத்திட்டம் என்னும் பெயரில் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 25 மாதிரிக் கிராமங்களில் 600 வீடுகளை நிருமாணிப்பதற்காக 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி உதவி இந்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிட்டு மேலும் 600 வீடுகளை நிருமாணிக்கும் பொருட்டு மேலதிகமான 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட இந்த கொடையினை பயன்படுத்தி 'கிராம சக்தி' மாதிரி கிராம கருத்திட்டத்தின் கீழ் மிகக்குறைந்த வருமானம் பெறும் மேலும் 600 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்துடன் இதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்வதற்கும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |