2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வௌிப்படுத்தல் சட்டத்தை திருத்துதல் - பொதுமக்களின் தேவைகள் தொடர்புபட்ட பணிகளை மேற்கொள்பவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் வௌிப்படைத் தன்மை வாய்ந்தவர்களாகவும் செயலாற்றுதல் வேண்டும். 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள், பொறுப்புக்கள் வௌிப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக அத்தகையோர் இலங்கையினுள் அல்லது அதற்கு வௌியே தங்களுக்கு சொந்தமாகவுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை காலத்திற்கு காலம் வௌிப்படுத்த வேண்டுமென்பதோடு, இந்த சட்டம் ஏற்புடையதாகும் ஆள் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடாத்துவதற்கும் இதன் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய முறையில் சொத்துக்களை மற்றும் பொறுப்புக்களை வௌிப்படுத்தத் தவறுதல், அத்தகைய வௌிப்படுத்தலில் பிழையான தகவல்களை குறிப்பிடுதல் அல்லது தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக தகவல்களை சமர்ப்பிக்காதிருத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சட்டத்தினால் குற்றவாளியாக்கப்படும் ஆள் ஒருவருக்கு தற்போது விதிக்கப்படும் தண்டனையானது 1,000/- ரூபாவை விஞ்சாத தண்டப்பணம் அத்துடன் / அல்லது ஒரு வருடத்தை விஞ்சாத காலத்திற்கு மறியற் தண்டனை வழங்குதல் ஆகும். தற்போதைய நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த தண்டத்தொகையை 100,000/- ரூபா வரை அதிகரிப்பதற்குத் தேவையான திருத்த சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |