• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தினால் அரிசி இறக்குமதி செய்தல்
- 2017 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரசி உற்பத்தியானது சுமார் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. ஆதலால், 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் வரை சந்தையில் அரிசித் தேவையை நிறைவு செய்வதற்காக 500,000 மெட்றிக் தொன் அரசியை கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 100,000 மெட்றிக் தொன் ஏற்கனவே இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதற்கான கட்டளை வழங்கப்பட்டுள்ளதோடு, மீதித் தேவையான 400,000 மெட்றிக் தொன் அரிசியினை துரிதமாக இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக திறைசேரி செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.