2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை பொதுவைத்தியசாலையில் மருத்துவ காவறைத் தொகுதியை விருத்தி செய்தல் - களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையொன்றான களுத்துறை பொதுவைத்தியசாலையின் மூலம் அகலவத்தை, புளத்சிங்ஹல, ஹொரணை, பண்டாரகம, களுத்துறை, மத்துகம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சேவைகளை வழங்குவதில் பாரிய பணியினை நிறைவேற்றுகின்றது. தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கூடிய இட வசதியினை வழங்கும் நோக்கில் இந்த வைத்தியசாலையில் மருத்துவ காவறை தொகுதி சார்பில் 07 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. , இந்த கட்டடத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை 2,817 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் பொறியியல் சேவைகள் தனியார் கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |