• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை கிழக்கு நீர்வழங்கல் கருத்திட்டம்
- 'இரஜரட்டையை எழுச்சிபெறச் செய்தல் - "பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்' என்னும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் பொலன்நறுவை கிழக்கு நகர பிரதேசம் உள்வாங்கப்படும் பிரதேசத்தில் புதிய நீர்வழங்கல் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் வெலிகந்த, திம்புலாகல, தமன்கடுவ, லங்காபுர, ஹிங்குரக்கொட மற்று எலஹெர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் சுமார் 262,481 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 354 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s. China Harbour Engineering Company (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.