• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய பொலன்நறுவை உபநகர அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- 'இரஜரட்டையை எழுச்சிபெறச் செய்தல் - பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்' என்னும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 09 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் உபகருத்திட்டமொன்றாக பாரிய பொலன்நறுவை உபநகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் கல்லால்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உத்தேச பொலன்நறுவை மரபுரிமை நகரம், வர்த்தக நகரம், நிருவாக நகரம் மற்றும் சிறுநீரக நோய் மருத்துவமனை என்பனவற்றுக்கு தேவைப்படும் மேலதிக நீர் வழங்கப்படும்.

இந்த நீர்வழங்கல் கருத்திட்டத்திற்குத் தேவையான இயந்திரங்களை மற்றும் மின்சார உபகரணங்களை வழங்குதல், பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் இயக்குதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 154 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. K P Projects International (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.