2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சப்பிரகமுவ சமன் தேவாலயத்தை அபிவிருத்தி செய்தல் - இரத்தினபுரி - பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் நாளாந்தம் வருகை தரும் இரத்தினபுரி மஹா சமன் தேவாலயத்தின் கூரை உட்பட ஏனைய கட்டடங்களில் சிதைவடைந்துள்ள பகுதிகளை துரிதமாக திருத்த வேண்டியுள்ளமை பற்றி தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் ஏனைய நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த தேவாலயத்தின் புராதன தன்மையை பாதுகாக்கும் விதத்தில் குறித்த திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|