2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய இளைஞர் மென்பொருள் போட்டிகள் - 2017 - 2019 - தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பத்தின் நலன்களை சமூகத்தில் அனைவருக்கும் வழங்குவதற்கு புத்தாக்க தீர்வுகளை வடிவமைக்கும் பொருட்டு இளைய சமூகத்தினரை பலப்படுத்தும் நோக்கில் இளைஞர்களுக் கிடையில் மென்பொருள் போட்டியொன்றை நடாத்துவதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மை உட்பட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்பன இணைந்து இந்தக் கருத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இதன் கீழ் அபிவிருத்தி சவால்களுக்கு தீர்வாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள்களை நிருமாணிப்பதற்காக மாகாண மட்டத்தில் 03 போட்டிகள் நடாத்தப்படவுள்ளதோடு, இதலிருந்து தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு இதற்குரியதான தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு அனுசரணை வழங்கப்படும். இதற்கமைவாக, இளைஞர் மென்பொருள் போட்டி 2017 - 2019 காலப்பகுதியில் நடாத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|