2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலிஸ் தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முறைமை பற்றிய கருத்திட்டம் - இலங்கை பொலிசுக்கு தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முறைமையொன்றை தாபிக்கும் பொருட்டு அமைச்சர வையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம், நவீன தொழினுட்பத்திற்கு அமைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதன் முதலாவது கட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தை தழுவும் விதத்தில் முன்னோடிக் கருத்திட்டமொன்றாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் சார்பு நிலைமையின் மீது கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நாடு முழுவதும் தழுவும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்குமாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|