2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நிருமாணிப்பு அபிவிருத்தி நோக்கங்களுக்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல் - விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிருமாணிப்பு பணிகளின் போது அதற்காக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து மதியுரைச் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆயினும் இந்த கருத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நிருமாணிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் சார்பில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு மேலதிகமாக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, கட்டடத் திணைக்களம், அரசாங்க பல்பலைக்கழகங்கள், அரசாங்க அபிவிருத்தி, நிருமாண கூட்டுத்தாபனம், இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனம் போன்ற அரசாங்க / பகுதி அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் முப்படைகளிடமிருந்தும் மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |