2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
செயற்கை கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான கள் உற்பத்தியை தடுப்பதற்காக மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - கள் உற்பத்தி செய்யும் மரமொன்றிலிருந்து கள்ளு சீவுவதற்கு அல்லது கள்ளு இறக்குவதற்கு செல்லுபடியாகும் உரிமப்பத்திரமொன்று பெற்றுக் கொள்ள வேண்டுமென்னும் ஏற்பாடுகள் மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பின்பு இந்த கட்டளைச் சட்டத்திற்கு செய்யப்பட்ட திருத்தங்களின் காரணமாக தற்போது கித்துள், பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள்ளு சீவுவதற்கு அல்லது கள்ளு இறக்குவதற்கு உரிமப்பத்திரமொன்று பெற்றுக் கொள்ளவேண்டியதில்லை. இதன் காரணமாக வடிசாலை, கள்ளு தவறணை, போத்தல் கள்ளு உற்பத்தி நிலையம் மற்றும் வினாகிரி உற்பத்தி நிலையம் போன்றவற்றுக்கு கிடைக்கும் கள்ளின் அளவினை மேற்பார்வை செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளதோடு, இது செயற்கை கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான கள் உற்பத்தி அதிகரிப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இதற்கமைவாக, நாட்டின் கள்ளு உற்பத்தியை ஒழுங்குறுத்தும் நோக்கில் கித்துள் மரம் தவிர கள்ளு சீவுவதற்காக பயன்படுத்தப்படும் தேங்காய் மற்றும் பனை மரங்களிலிருந்து கள்ளு சீவுவதற்கு உரிமப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்னும் ஏற்பாடுகளைச் செய்து மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மதுவரி (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |