2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் "தேசிய விஞ்ஞான தினம்" மற்றும் "தேசிய விஞ்ஞான வாரம்" என்பவற்றை கொண்டாடுதல் - சமூகத்திற்கு விஞ்ஞானத்தின் முக்கியத்துவம், சமாதானம், அபிவிருத்தி போன்ற துறைகளில் விஞ்ஞானத்திற்கு உள்ள பொறுப்பினை எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவெம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று "உலக விஞ்ஞான தினம்" கொண்டாடப்படுகின்றது. இதற்கு ஒருங்கிணைவாக இலங்கையில் "தேசிய விஞ்ஞான தினம்" மற்றும் "தேசிய விஞ்ஞான வாரம்" என்பனவற்றை கொண்டாடுவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடையும் போதும் நிலையான சமூகமொன்றை உருவாக்கும் போதும் விஞ்ஞானம் சார்ந்த பொறுப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு அறியச்செய்வித்தல், பலப்படுத்துதல் உட்பட விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப துறையின் மேம்பாட்டினை குறியிலக்காகக் கொண்ட பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒவ்வொரு ஆண்டும் நவெம்பர் மாதம் 10 ஆம் திகதி "தேசிய விஞ்ஞான தினம்" ஆகவும் அன்றைய திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் வாரம் "தேசிய விஞ்ஞான வாரம்" ஆகவும் பிரகடனப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |