• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு ஏற்புடைய தொழினுட்ப அபிவிருத்தி மற்றும் புலமைச் சொத்துக்கள் பகிர்வு கருத்திட்டம் (2017
- உயர் மற்றும் கீழ்மட்ட தொழினுட்பங்களின் இடைமட்ட நிலையில் வகுப்பீடு செய்யப்பட்டுள்ள ஏற்புடைய தொழினுட்பம் என்பது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும் வறுமை நிலையிலிருந்து மீள்வதற்கும் பயன்படுத்தக்கூடிய வினைத்திறன் மிக்கதும் செலவு பயனுள்ளதுமான தீர்வொன்றாகும். புலமைச் சொத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்புடைய தொழினுடபத்தை விருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை தென்கொரிய குடியரசின் புலமைச் சொத்துக்கள் அலுவலகத்தினாலும் கொரிய புத்தாக்குகை மேம்பாட்டு சங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தக் கருத்திட்டத்தின் கீழ், தேங்காய் துருவல் பாவைனயின் மூலம் நாட்டில் பொருத்தமான தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கும் அதுசார்ந்த உற்பத்திகளை விருத்தி செய்வதற்குமான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஏற்புடைய தொழினுட்ப கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக உரிய நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.