2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த திண்மக்கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம் - திண்மக் கழிவு முகாமைத்துவம் சார்பில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு போதுமான வசதிகளை வழங்குவதும் உரிய வழிமுறையொன்றை தயாரிப்பதும் காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இதற்காக மாவட்ட மட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும் முறையான வேலைத்திட்டமொன்றின் ஊடாக தீர்வினை பெற்றுக் கொடுப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதன் கீழ் அதிக சனத்தொகை உட்பட துரித கைத்தொழில் மயமாதல் என்பன காரணமாக பாரிய அளவில் நகர திண்மக் கழிவுகள் ஒன்று திரளும் கம்பாஹா மாவட்டத்தில் துப்பரவேற்பாட்டு கழிவு இடப்படும் இடமொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக, கம்பஹா மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி நிறுவனங் களினாலும் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகளை முறையாக முகாமிப்பதற்கு துப்பரவேற்பாட்டு கழிவு இடப்படும் இடமொன்றையும் சேதனபசளை உற்பத்தி செய்யும் இடமொன்றையும் தாபிக்கும் கருத்திட்டமொன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் 989 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |