2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் இந்திய இலங்கை பயணிகள் கப்பல் சேவை கையாள்கையை நடைமுறைப்படுத்துதல் - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை முன்னெடுப்பதன் மூலம், இரு நாடுகளினதும் மக்களுக்கிடையில் நெருக்கமான உறவினை ஏற்படுத்தல், கலாசார மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்தல் மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை ஊக்குவித்தல் என்பன சாத்தியமுடையதாகவிருக்கும். கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான கருத்திட்டத்தை செயற்படுத்தும் பொருட்டு ஆர்வ வௌிப்படுத்தல்கள் அதற்கிணங்க கோரப்பட்ட போதிலும் இந்நோக்கத்திற்கான போதுமான பதிலளிப்புக்கள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. ஆதலால், இக்கருத்திட்டம் சம்பந்தமான நடைமுறையிலுள்ள பெறுகை நடைமுறையினை இரத்துச் செய்வதற்கும் ஆர்வ வௌிப்படுத்தல்களை மீளக் கோரி, பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டும் துறைமுகங்கள், கப்பற்றுறை மஹிந்த சமரசிங்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |