2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனைவிட கட்டடத்தில் குடியகல்வு பிரதேசமொன்றை மீளவும் அமைத்தல் - விமான பயணிகளுக்கு கூடுதல் வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனைவிட கட்டடத்தில் குடியகல்வு பிரதேசமொன்றை மீள அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பெறுமதிசேர் வரி (VAT) இன்றி 472.5 மில்லியன் ரூபா தொகைக்கு M/s. R.N.Constructions (Pvt) Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |