2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப் படவுள்ள புலம்பெயர் தொழிலாளர் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல் - ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கு தொழில் நிமித்தம் வீட்டுப் பணிப் பெண்களை அனுப்பும் போது நவீன தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த தொழிலாளர்கள் தொடர்பிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் தௌிவான மற்றும் வௌிப்படைத்தன்மை வாய்ந்த விதத்தில் ஆட்சேர்ப்புக்களை செய்வதற்கும் உரியதாக புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கு அமைவாக இலங்கை தொழிலாளர்களை அந்நாட்டு சேவைக்காக தொடர்புபடுத்து வதற்கும் மனித வர்த்தகம் போன்ற முறைகேடுகளிலிருந்து இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |