2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நம்பிக்கை பொறுப்புக் கட்டளைச்சட்டத்தை திருத்துதல் - வௌ்ளைப் பணமாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் ஆபத்து போன்றவற்றை குறைக்கும் பொருட்டு சருவதேச தரங்களை பூர்த்தி செய்வதற்காக நம்பிக்கை பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் விடயநோக்கெல்லையை விரிவுபடுத்தி திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கை பொறுப்பு (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்தத்மானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |