2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெல்வத்த லங்கா சீனி கம்பனிக்கான நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் - இணை அரச கைத்தொழில் நிறுவனமொன்றான பெல்வத்த லங்கா சீனி கம்பனியானது ஊவா மாகாண பொருளாரத்தில் மிக முக்கிய பணியினை நிறைவேற்றுகின்றதோடு, நாட்டின் சீனித் தேவையின் சுமார் 10 சதவீதம் இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த கம்பனியின் சீனி உற்பத்தி நோக்கங்களுக்குத் தேவையான கரும்பு செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாய நிலங்கள் பெரும்பாலான மழை நீரேந்து பிரதேசங்களாவதோடு, நீர் பற்றாக்குறை காரணமாக கரும்பு அறுவடை குறைவடைந்துள்ளமையினால் கம்பனியின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆதலால், கரும்பு செய்கைப் பண்ணப்பட்டுள்ள பிரதேசங்களின் பயன்பாட்டினை விருத்தி செய்து சீனி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பெல்வத்த சீனி தொழிற்சாலையின் அருகாமையிலுள்ள கரும்பு செய்கைப்பண்ணப்பட்டுள்ள பிரதேசங்களில் அரசாங்கத்தினதும் இந்த கம்பனியினதும் நிதிப் பங்களிப்புடன் நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் கீழ் 13 குளங்களையும் கால்வாய்களையும் விருத்தி செய்வதற்கும் புதிதாக கால்வாய்கள், பொய்கைகள் உட்பட குழாய்கிணறுகள் போன்றவற்றை நிருமாணிப்பதற்குமாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |