• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க, கடற்றொழில் (வௌிநாட்டு படகுகளை முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கைக்குச் சொந்தமான நீர் பரப்பில் வௌிநாட்டு படகுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் மீன்பிடித்தல் உட்பட இதற்குரிய பணிகளை ஒழுங்குறுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமித்தல் என்பன சம்பந்தமாக 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க, கடற்றொழில் (வௌிநாட்டு படகுகளை முறைப்படுத்தல்) சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று தசாப்தகாலத்தினுள் இந்த துறைக்குரியதாக சருவதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த சட்டத்திற்குத் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள கடற்றொழில் (வௌிநாட்டு படகுகளை முறைப்படுத்தல்) (திருத்த) சட்டமூலத்தைத் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.