• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு கடற்றொழில் துறைமுகங்களைக் கையளித்தல்
- நாட்டின் கரையோரத்தில் 48 மீன்பிடி துறைகள் செயற்படுகின்றதோடு, இதன்மூலம் கரையோர மீன்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுமார் 27,000 மீன்பிடி படகுகளுக்கு வசதிகளை வழங்குகின்றது. புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும் கரையோர மீன்பிடித் தொழிலின் பயனை அதிகரிப்பதற்கும் மீன்களை ஏற்று இறக்குவதற்கும் ஏலம் விடும் நவீன வசதிகளுடன் பின் அறுவடை தொழினுட்பத்தைப் பாவிக்கும் சாத்தியம் கொண்ட மீன்பிடித்துறைகள் அபிவிருத்தி செய்யப்படவேண்டியுள்ளது. இதற்காக தற்போது கடற்றொழில் மற்றும் நீரகவளமூல திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழுள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு சிறந்த முகாமைத்துவ கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டியுள்ளது.

இதற்கமைவாக, மீன்பிடி துறைகளின் முகாமைத்துவம், ஒழுங்குறுத்துகை, பராமரிப்பு, அபிவிருத்தி என்பன தொடர்பிலான பொறுப்புகள் இது தொடர்புபட்ட போதுமான பௌதிக மற்றும் மனிதவளங்களைக் கொண்ட இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.