2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கந்தளாய் ஆதார வைத்தியசாலையினதும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினதும் கழிவுநீர் முறைமைகளை விரு்ததி செய்தல் - நோயாளர் சிகிச்சை சேவைகளின் விருத்திக்கு ஒருங்கிணைவாக வைத்தியசாலைகளின் பயன்பாட்டு சேவைகளையும் விருத்தி செய்வது அத்தியாவசியமானதாகும். வைத்தியசாலைகளிலிருந்து வௌியேற்றப்படும் கழிவுநீர் முறையான முகாமைத்துவமின்றி சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுவது கடும் சுற்றாடல் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு காரணமாய் அமையும் இந்த நிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வைத்தியசாலைகளின் கழிவுநீர் முறைமைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்கீழ் 103.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் கந்தளாய் ஆதார வைத்தியசாலை சார்பில் கழிவுநீர் முறைமையொன்றைத் தாபிப்பதற்கும் 95 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமொன்றைத் தாபிப்பதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |