2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகளை நெறிப்படுத்தல் - சீரற்ற காலநிலை, அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் நிகழுதல் மற்றும் இதன் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற விடயங்கள் காரணமாக அனர்த்தங்களுக்கான முன்தயார் நிலைமை மற்றும் அதற்காக உடனடியாக செயற்படும் ஆற்றலை அதிகரித்தல் சம்பந்தமாக அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் சார்பில் தற்போது நிலவும் நிவாரண முகாமைத்துவ பொறிமுறையில் காணப்படும் குறைகளை குறைத்துக் கொண்டு சிறந்த ஒருங்கிணைப்புடனும் ஒன்றிணைந்தும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ செயற்பாடொன்றை கட்டியெழுப்புவது அத்தியாவசியமானதாகும். இதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு நிகழ்ச்சித்திட்டம், ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றுடன் இணைந்து வழிகாட்டல்களைத் தயாரிக்கும் பணிகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பற்றி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்ப்பட்டது. |