• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்த ஆபத்து குறைப்புக்குரிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம்
- பரந்த அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அனர்த்தம் காரணமாக பொது மக்கள், சொத்துக்கள் மற்றும் பொருளாதாரம் என்பவற்றின்பால் ஏற்படும் தாக்கத்தினை குறைத்து இலங்கையை பாதுகாப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்காக அனர்த்த ஆப்பத்துக்களை அறிந்துகொள்தல், அனரத்த ஆபத்தினைக் கட்டுப்படுத்துதல், அனர்த்த ஆப்பத்தினைக் குறைத்தல் மற்றும் தயார் நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்தல், தயார் நடவடிக்கைகள் மற்றும் புனரமைப்புத் திட்டங்கள் சார்பில் மிகச் சிறந்த மீள் கட்டியெழுப்பல் கருதுகோள்களைப் பயன்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளை குறியிலக்காக் கொண்டு, அனர்த்த ஆபத்து குறைப்புக்கான திறமுறை திட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்கமைவாக, அனர்த்த ஆபத்து குறைப்பு சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.