2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் - நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொண்டு இறக்குமதியை வரையறுப்பதையும் உணவு உற்பத்தி சம்பந்தமாக தன்னிறைவினை அடைவதனையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் கடந்த சில போகங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பின்னடைந்துள்ளது. இந்த நிலைமையை வெற்றி கொள்வதற்காக 2017-2018 பெரும்போகத்தில் உணவு உற்பத்தியை புதிய ஊக்கத்துடன் ஆரம்பிப்பதற்கு அரசாங்க நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தனியார் துறையினர் ஆகியோர்களின் பங்களிப்புடன் "தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்" என்னும் பெயரில் துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிக் கொள்வதற்கு உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்பினையும் கவனத்தினையும் ஈர்க்கும் பொருட்டு இதன் அங்குரார்ப்பண வாரமான 2017 ஒக்ரோபர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் விசேட செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |