2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான உத்தியோகபூர்வ வேட்புமனுக்களை மீண்டும் கோருதல் - வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகள் தொடர்பில் 2011‑03‑17 ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்த உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் பல்வேறுபட்ட காரணங்களின் நிமித்தம் பிற்போடப்பட வேண்டியிருந்தது. ஆதலால், கோரப்பட்டிருந்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கு ஏதுவாக, புதிய வேட்புமனுக்களை கோரி அத்துடன் புதிய தேர்தல் முறைமையின் கீழ் புதிய தேர்தல்களை நடாத்துவதற்காக சட்டவாக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளன. அதற்கிணங்க, உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) தொடர்பான வரைவுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன்பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்ச ரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |